Wednesday, February 8, 2012

அனைத்துமான இறைவனும் நம்மிடம்

செய்வதெல்லாம் சரிதான்



முப்பொழுதும் எப்பொழுதும் நமக்கு


சற்று தள்ளிநின்று நாம் சரிதானா


என்று நமக்குள்ளே உற்றுநோக்குவோம்.

உயிராய் உயிர்ப்புடன் உள்ளவையனைத்தும்


மறு மாற்றத்திற்கு உரியன.

மலர்கள் கனியாகவும் விதைகள்


மரமாகவும் மாறுவது விதி.

நாமும் நன்மை கருதி நம்மை


மாற்றிக்கொண்டால் நன்மையே

பண்புடன் பணிவுடன் அன்புடன்


கருணையுடன் கனிவுடன் அன்புசெய்

இன்புசெய், இழப்பது ஏதுமில்லை


இனியொருமுறை வாழ்வு இல்லை.

உலகம், நட்பு, காதல், உறவுகள்


அனைத்துமான இறைவனும் நம்மிடம்









No comments:

Post a Comment