Friday, May 20, 2011

இலங்கையின் யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூர் நாட்டின் பிரதி பிரதமராக நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டு உள்ளார்


இலங்கையின் யாழ்ப்பாணத்து வம்சாவளித் தமிழரான தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூர் நாட்டின் பிரதி பிரதமராக நேற்று முன் தினம் நியமிக்கப்பட்டு உள்ளார். சிங்கப்பூர் நாட்டின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான தர்மன் சண்முகரட்ணத்தின் மூதாதையர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தர்மன் சண்முகரட்ணத்தின் அப்பப்பா ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவர்.
தர்மன் சண்முகரட்ணம் 1957 ஆம் ஆண்டு பிறந்தவர் . 2001 ஆம் ஆண்டு தொடக்கம் முழு நேர அரசியல் ஈடுபட்ட இவர் ஏராளமான அமைச்சுப் பதவிகளை வகித்து வந்திருக்கின்றார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதி அமைச்சராக உள்ளார்.
நேற்று முன் தினம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது இவரது நிதி அமைச்சர் பதவியில் மாற்றம் செய்யப்படவில்லை. இவர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து இருந்தார். இவர் ஒரு பொருளாதார நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment