Monday, November 21, 2011

இந்த வருடம் குபேர கிரிவலம் 23.11.2011

உங்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ,
ஒரு சுமுகமான நிலை வர வேண்டும் என்று விரும்பினால் , நீங்களும் இந்த தினத்தைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள். 
உங்கள் ஜாதக அமைப்புப் படி - கிடைக்கும் பலன்கள் , முன்னே பின்னே தாமதப் பட்டாலும், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட - ஒரு படி நிச்சயம் முன்னேறுவீர்கள்.

இந்த வருடம் குபேர கிரிவலம் 23.11.2011 புதன்கிழமை வருகிறது.அன்று மாலை சரியாக 4 மணி இலிருந்து மாலை 6 மணி வரை குபேரலிங்கத்திடம் , உங்கள் நியாயமான கோரிக்கையை வையுங்கள். பூஜை முடிந்த பிறகு - அங்கிருந்து நீங்கள் கிரிவலம் தொடங்கி , முடிக்க வேண்டும். புதன் கிழமையாக இருப்பதால் மாலை 4  மணி முதல் 5 மணி வரை  குரு ஹோரையும் சேர்ந்து வருகிறது.

கிரிவலம் செல்லும்போது எவரிடமும் பேசாமல்,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு செல்லவும். ஐயா மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் கூறியபடி மஞ்சள் ஆடை , அல்லது வேஷ்டி
அல்லது ஒரு கைக்குட்டையாவது வைத்து இருந்தால் ,
 உங்கள் உடலில் இந்த மந்திர ஆகர்ஷணம் தங்கும்.
 
குபேர லிங்கத்தில் ஆரம்பித்து , ஈசான்ய லிங்கம் வந்து - அண்ணாமலையாரை தரிசித்து விட்டு - ராஜ கோபுரத்தில்
கிரிவலம் தொடங்கி , பின் அஷ்ட லிங்கங்களை வரிசையாக தரிசித்து விட்டு - ராஜ கோபுர வாசலில் கிரிவலம் முடிப்பது உசிதம். 

இந்த நாள் என்று இல்லாமல் , எல்லா நாளுமே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது , மிக மிக
நல்ல காரியம். இந்த நாளுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பது உண்மையோ , பொய்யோ - பௌர்ணமி அல்லாத ஒரு
சாதாரண நாளில் , நிம்மதியாக - சுற்றி இருக்கும் கூட்டத்தின் தொந்தரவு இல்லாமல் , மன அமைதியுடன் கிரிவலம்
வர முடியும். அஷ்ட லிங்கங்களை கண் குளிர தரிசனம் செய்ய முடியும். 

சாதாரண  நாளில் கூட ஒரே ஒரு முறை - குபேர லிங்க
வாசலில் ஒருவருக்கு அன்னதானம்  செய்தவர்களுக்கு -
ஒரு மாதத்துக்குள்ளாகவே - இரண்டு மடங்கு சம்பளத்துடன்
புதிய வேலை கிடைத்தும் இருக்கிறது.

எல்லாம், பதி பக்தியுடன் , நம்பிக்கையுடன் - நாம் வேண்டும் முறையில் தான் இருக்கிறது.. அப்படி இருக்கும்போது ,
இந்த நாளை பயன்படுத்துவது நல்லது என்பது
என் அபிப்பிராயம்.......

யோகம் உள்ளவர்கள் நிச்சயம் வர முடியும். நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு , அந்த அண்ணாமலையாரின் அருளும்,
லட்சுமி கடாட்சமும், குபேர சம்பத்தும் நிச்சயம் உண்டு..!

நேரம் தாராளமாக இருந்தால் , அண்ணாமலை கிரிவலம்
முடிந்து திருப்பதி சென்று வருதல் , கூடுதல் விசேஷமாக
அமையும்.  

மழை நேரமாக இருப்பதால் , அதற்க்கு தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது நல்லது. 

முயற்சி செய்து பாருங்களேன்..!  

வாழ்க அறமுடன் ! வளர்க அருளுடன் !

No comments:

Post a Comment